tamilnadu

img

நாய்களுக்கு பயந்து ஒளிந்த நபர் எரித்துக்கொலை

லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில் நாய்களுக்கு பயந்து வீடு ஒன்றில் ஒளிந்த நபர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் ரகோபூர் கிராமத்தில் சுஜித் குமார் நடந்து சென்றுள்ளார். அவரை சில நாய்கள் துரத்தவே வீடு ஒன்றில் சென்று ஒளிந்துள்ளார். 
அப்போது  வீட்டில் இருந்தவர்கள் அவரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் அவரை அடித்து, தாக்கியுள்ளனர்.  இதன்பின் அவர் மீது தீ வைத்து எரித்துள்ளனர்.  இந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.